எப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா-ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா.
முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன் என்னைப் பற்றி பெருமையாகஅப்பா பேசிக்கொண்டிருந்ததை...
அம்மா எத்தனையோ முறை திட்டினாலும் உறைத்ததில்லை
உடனே உறைத்திருக்கிறது என்றேனும் அப்பா முகம் வாடும் போது ..
உன் அப்பா எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் தெரியுமா என என் நண்பர்கள் என்னிடமே சொல்லும் போதுதான் எனக்குத் தெரிந்தது எத்தனை பேருக்குக்கிடைக்காத தந்தை எனக்கு மட்டும் என...
சிறுவயதில் என் கைப்பிடித்து நடைபயில சொல்லிக்கொடுத்த அப்பா என் கரம் பிடித்து நடந்த போது என்ன நினைத்திருப்பார்..?
லேசாக என் கால் தடுமாறினாலும் பதறும் அப்பா இன்று நான் தடுமாறிய போது பதறாமல் இருக்கிறார் மீளா துயிலில்...
அம்மா செல்லமா அப்பா செல்லமா என கேட்டபோதெல்லாம் பெருமையாகச் சொல்லி இருக்கிறேன் அம்மா செல்லமான அப்பா செல்லம் என இன்று அப்பா சென்ற பின்னர்நான் யார் செல்லம்..?
எத்தனையோ பேர் நான் இருக்கிறேன் எனச் சொன்னாலும் அப்பாவை போல் யார் இருக்க முடியும்..?
சொல்லிக் கொடுத்ததில்லை திட்டியதும் இல்லை, இல்லை என்றும் சொன்னதுமில்லை, வேண்டாம் எனக்கூறியதும் இல்லை இருந்தும் ஏதோ ஒன்றினால் கட்டுப்படுத்தியதுஅப்பாவின் அன்பு
நானும் காட்டியதில்லை அவரும் காட்டியதில்லை எங்கள் பாசத்தை... இருந்தும் காட்டிக் கொடுத்த கண்ணீரைத் துடைக்க இன்றுஅப்பாவும் இல்லை..
courtesy - email from friend
No comments:
Post a Comment